Search

Rebecca

Nov 20, 2025

உலகம்

ஈக்வடாரில் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து : 21 பேர் பலி

ஈக்வடாரில் உள்ள குவாரந்தா-அம்பாடோ இடையிலான வீதியில் பயணிகளுடன் சென்றுக்கொண்டிருந்த பேருந்து கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

சிமியாடுக் பகுதியில் மலைப் பாதையில் பயணித்தபோது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து பள்ளத்தில் விழுந்துள்ளது.

இந்த பேருந்து விபத்தில் 21 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு மீட்புக் குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

படுகாயமடைந்த பயணிகள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp