Search

Rebecca

Nov 19, 2025

உள்ளூர்

ஜனாதிபதிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் விசேட கலந்துரையாடல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியுடன் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இங்கு மாகாண சபைத் தேர்தல் மற்றும் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

திருகோணமலை பிரதேசத்தில் இனங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் அதனை தடுப்பதற்காக இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.

நாட்டின் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் பௌத்த விகாரைகள் நிர்மாணிக்கப்பட்டு வருவது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் இங்கு கருத்து வெளியிட்டுள்ளனர்.

இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன், எம்.ஏ.சுமந்திரன், சிவநேசன், சிறிதரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp