Search

Rebecca

Nov 21, 2025

உள்ளூர்

SJBயின் முன்னாள் உறுப்பினர் கைது!

தெற்கு கடற்பரப்பில் நேற்று (20) போதைப்பொருட்களுடன் மீன்பிடிப் படகொன்று கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் பன்னல பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சக்தியின்(SJB) முன்னாள் உறுப்பினர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாதுகாப்புத் தரப்பினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் போதே இந்த மீன்பிடிப் படகு கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த படகிலிருந்து 15 போதைப்பொருள் பொதிகள் மீட்கப்பட்டுள்ளதுடன், அதில் 300 கிலோ ஹெரோயின், 02 துப்பாக்கிகள் இருந்ததாகத் பொலிஸார் தெரிவித்தனர்.


Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All