Oct 24, 2025
உள்ளூர்
போதைப்பொருட்களின் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கு ஒன்றினைவோம்.
நச்சுத்தன்மை வாய்ந்த போதைப்பொருட்களின் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான அவசர வேலைத்திட்டத்திற்காக முழு நாடும் ஒன்றினைய வேண்டும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
போதைப்பொருளை ஒழிப்பதற்கான "தேசிய ஒன்றிணைந்த பணி" குறித்து ஊடக நிறுவனத் தலைவர்களுக்கு விளக்கமளிக்க ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தொடர்ந்து தெரிவிக்கையில்,
அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சினைகள் குறித்து விவாதங்களை எழுப்ப முடியும் என்றாலும், போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான தேசிய பொறுப்பை நிறைவேற்றுவது குறித்து விவாதத்திற்கு இனி இடமில்லை என்று ஜனாதிபதி கூறினார்.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றக் கும்பல்களின் நிதி பலம், பொருளாதாரம், சமூகக் கட்டமைப்பு, அரசு இயந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சியைக் கூட அழிப்பதன் மூலம் நாட்டையும் சமூகத்தையும் அழித்து வருவதாகவும் ஜனாதிபதி கூறினார்.
இந்த அச்சுறுத்தலைத் தொடர அனுமதிக்கக் கூடாது என்று தற்போதைய அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்றும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தேசம் ஒன்றிணைவதற்கான தேசிய மிஷனின் தொடக்க விழா அக்டோபர் 30 ஆம் தேதி காலை 10:00 மணிக்கு கொழும்பில் உள்ள சுகததாச உள்ளக அரங்கில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All








