Jino
Sep 27, 2025
உள்ளூர்
செஞ்சோலையில் நினைவுத்தூபிக்கு நீதியான அங்கீகாரம். #Video
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் கடந்த 2006.08.14 அன்று
தலைமைத்துவ பயிற்ச்சிக்காக ஒன்றுகூடியிருந்த பாடசாலை மாணவிகளை இலக்கு வைத்து இலங்கை விமானப்படை விமானங்கள் நடாத்திய மிலேச்சத்தனமான தாக்குதலில் 53 மாணவிகள் மற்றும் 4 பணியாளர்களும் உயிரிழந்திருந்தனர்.
இந்நிலையில், குறித்த மாணவிகளின் நினைவாக இடைக்கட்டு வளாகத்தில் நினைவுத்தூபி ஒன்றை அமைக்கவேண்டும் என பலராலும் தொடர் கோரிக்கை முன்வைக்கப்பட்டுவரும் நிலையில் இடைக்கட்டு செஞ்சோலை வளாகத்தை புதுக்குடியிருப்பு பிரதேச சபை ஆளுகைக்கு உட்படுத்தி அங்கு நினைவுத்தூபி ஒன்றை அமைகக்க புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All