Oct 23, 2025
உள்ளூர்
இன்று 10 மணி நேர நீர் வெட்டு !
கொழும்பு 01 தொடக்கம் 15 வரை பல முக்கிய நகரங்களில் இன்று (23) காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 10 மணி நேர நீர் வெட்டு அமுலாகும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நீரை பெறும் பிரதான நீர் பம்பிக்கு வழக்கப்படும் மின்சாரம் துண்டிக்கப்படுவதால் அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் ஊடான நீர் விநியோகம் இவ்வாறு துண்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, கொழும்பு 01 முதல் கொழும்பு 15 வரையான பகுதிகளுக்கும், பத்தரமுல்லை, பெலவத்தை, ஹோகந்தர, கொஸ்வத்தை, தலவத்துகொடை, கோட்டே, ராஜகிரிய, மிரிஹான, மாதிவெல, நுகேகொடை, நாவல, கொலன்னாவ, ஐ.டி.எச், கொட்டிகாவத்தை, அங்கொடை, வெல்லம்பிட்டிய, ஒருகொடவத்தை, மஹரகம, பொரலஸ்கமுவ ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All








