Search

Jino

Sep 30, 2025

உள்ளூர்

தப்பியோடிய சிறுவர்கள் - ஐவர் கைது.

கம்பஹா - சபுகஸ்கந்த மாகொல சிறுவர் தடுப்பு நிலையத்திலிருந்து 15 சிறுவர்கள் தப்பியோடிய நிலையில், அதில் ஐவர் நேற்று (29) இரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் குறித்த நிலையத்திலிருந்து தப்பியோடிய 15 சிறுவர்களில், 4 சிறுவர்களைத் தவிர, மீதி 11 சிறுவர்களும் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டவர்கள் எனவும் தெரிய வந்துள்ளது.

மேலும், தப்பியோடியவர்கள் 15 முதல் 17 வயதுக்குபட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளிலும், தப்பியயோடியவர்களை தேடும் பணிகளிலும் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.b

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp