Search

Aug 25, 2025

உள்ளூர்

பூண்டுலோயா லயன் குடியிருப்பில் தீப்பரவல்.

நுவரெலியா மாவட்டத்தில் பூண்டுலோயா, டன்சினன் மத்திய பிரிவில் உள்ள லயன் குடியிருப்பில் ஏற்பட்ட தீப்பரவலில் 10 வீடுகள் சேதமடைந்துள்ளன.

இன்று (25) முற்பகல் 11 மணியளவில் குறித்த லயன் குடியிருப்பில் தீப்பரவல் ஏற்பட்டிருந்தததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த தீபரவலில் 4 வீடுகள் முற்றிலும் தீயினால் சேதடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

அந்த வீடுகளில் வசித்தவர்களின் உடமைகள் தீயில் கருகியுள்ளது, குறிப்பாக இந்த சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

மேலும், இத் தீப்பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட 30 பேர் தற்காலிக தோட்ட மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இத் தீப்பரவலானது மின்சார கசிவு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், இதில் ஏற்பட்ட சேதம் தொடர்பில் இன்னும் மதிப்பிடப்படவில்லை என பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All