Search

Sep 25, 2025

உள்ளூர்

எக்ஸ்பிரஸ் பேர்ள் வழக்கு - உயர் நீதிமன்றின் நடவடிக்கை.

எக்ஸ்பிரஸ் பேர்ள்ஸ் கப்பல் தீ விபத்து தொடர்பான அடிப்படை உரிமைகள் வழக்குகள் மையமாக, இழப்பீட்டை செலுத்தத் தவறிய வெளிநாட்டு கப்பல் நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கலாமா என்பது தொடர்பாக, உயர் நீதிமன்றம் இன்று (25) சட்டமா அதிபருக்கு விசாரணை செய்ய உத்தரவிட்டது.

இந்த வழக்குகள் இன்று அழைக்கப்பட்டபோது, நீதிமன்றம், கடந்த கால உத்தரவுகள் எவ்வாறு செயல்படுத்தப்பட்டுள்ளன என்பதை ஆராய விருப்பம் தெரிவித்தது.

அதற்கமைய, சட்டமா அதிபர் 2026 ஜனவரி 26ஆம் திகதி அன்றைய நீதிமன்ற அமர்வில் சமர்ப்பணங்களை முன்வைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All