Oct 28, 2025
உள்ளூர்
ஹாஷிஷ் கடத்த முயன்ற கனேடிய நாட்டு பிரஜை கைது!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 182.5 மில்லியன் ரூபா பெறுமதியான ஹாஷிஷ் போதைப்பொருளை கடத்த முயன்ற 21 வயதுடைய கனேடிய நாட்டு பிரஜை ஒருவர் இன்று (28) அதிகாலை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
அவர் கனடாவில் உயர்கல்வி பயிலும் மாணவர் என்று தெரிவிக்கப்படுகிறது.சந்தேக நபர் டுபாயில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளார்.
குறித்த நபர் கொண்டு வந்த பயணப் பைகளை சோதனை செய்த போது, 18.253 கிலோகிராம் ஹாஷிஷை சுங்க அதிகாரிகளால் கண்டுப்பிடிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டவர் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All








