Search

Sep 18, 2025

உள்ளூர்

நோயாளிகளுடன் அம்பியூலன்ஸ் வண்டி விபத்து.

பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையிலிருந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு இரண்டு நோயாளிகளை ஏற்றிச் சென்ற அம்பியூலன்ஸ் வண்டி ஒன்று இன்று வியாழக்கிழமை (18) காலை 11.00 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அம்பியூலன்ஸ் வண்டி லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறிப்பாக, விபத்தின் போது எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தினை தொடர்ந்து நோயாளிகள் இருவரும் வேறு அம்பியூலன்ஸ் வண்டியில் ஏற்றிச் செல்லப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All