Oct 15, 2025
உள்ளூர்
தெற்கு கடலில் மிதந்த பொதிகளில் 839 கிலோ போதைப்பொருட்கள் !
தெற்கு கடலில் மிதந்து வந்த நிலையில் நேற்று 14 சுமார் 50 போதைப்பொருள் பொதிகள் மீட்கப்பட்டன இவற்றில் மொத்தம் 839 கிலோகிராம் போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ் பொதிகளில் 670 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள், 156 கிலோகிராம் ஹெரோயின் மற்றும்
12 கிலோகிராம் ஹஷீஷ் அடங்குகின்றன.
இந்தப் பொதிகள் நேற்று (14) மாலை தங்காலை மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டன.
3 பொதிகளில் ஹெரோயின் இருப்பதாகவும், மற்ற 48 பொதிகளிலும் ஐஸ் ரக போதைப்பொருள் இருப்பதாகவும் கடற்படை தெரிவித்தனர்.
மேலும், இவை உனாகுருவே சாந்த என்ற போதைப்பொருள் கடத்தல்காரருக்குச் சொந்தமானவை என சந்தேகிக்கப்படுகிறது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All








