Search

Jino

Oct 2, 2025

உள்ளூர்

கிளிநொச்சியில் 31 வெடிக்காத குண்டுகள் மீட்பு.

கிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முகமாலை வடக்கு பகுதியில் நேற்று (01) பிற்பகல் 2:30 மணியளவில் 31 வெடிக்காத குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

முகமாலை வடக்கு பகுதியில் வீட்டு உரிமையாளர் ஒருவர் தமது வீட்டில் பள்ளம் தோண்டியபோது, ஆபத்தான குண்டுகள் கண்டறியப்பட்டது. தொடர்ந்து, அவர் உடனடியாக பளை பொலிஸாருக்கு அறிவித்தார்.

கிளிநொச்சி நீதிமன்ற உத்தரவின் படி, பாதுகாப்பான முறையில் குண்டுகளை மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp