Search

Jino

Sep 20, 2025

உள்ளூர்

மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் 200 கிராம் "ஜஸ்" பறிமுதல்.

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி நேற்று (19) மாலை பயணித்த புகையிரதத்தில், 4:10 மணியளவில் மட்டக்களப்பு புகையிரத நிலையத்தை வந்தடைந்தபோது, கைவிடப்பட்ட பை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

புகையிரத பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குறித்த பையை மீட்டு, புகையிரத அதிபரிடம் ஒப்படைத்தனர்.

பையை பரிசோதித்தபோது, அதில் 252 பெக்கெட்டுகளில் பொதி செய்யப்பட்ட 200 கிராம் "ஜஸ்" வகை போதைப் பொருள் இருப்பது கண்டறியப்பட்டது.

மட்டக்களப்பு தலைமையக பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், விரைந்த பொலிஸார், பையை மீட்டு, அதிலிருந்த போதைப் பொருளை கைப்பற்றினர்.

மேலும், இச்சம்பவம் குறித்து மட்டக்களப்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp