Search

Rebecca

Sep 8, 2025

உலகம்

பூட்டானில் அடுத்தடுத்து மிதமான நிலநடுக்கங்கள்

பூட்டானில் இன்று அடுத்தடுத்து மிதமான நிலநடுக்கங்கள் உணரப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முதலாவதாக உணரப்பட்ட நிலநடுக்கமானது ரிச்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானதாக நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை இந் நிலநடுக்கம் பதிவான சில மணி நேரங்கள் கழித்து 2.8 ரிச்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் எவ்வித உயிரிழப்புகளோ, சேதங்களோ ஏற்பட்டதாக எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை என குறிப்பிடப்படுகிறது.


Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp