SEGU
Sep 15, 2025
உள்ளூர்
730 நாட்களை கடந்து மயிலத்தமடு அறவழி போராட்டம் - அரசுக்கெதிராக மட்டக்களப்பில் அணிதிரண்ட மக்கள்
மட்டக்களப்பு மாவட்டம் மாதவனை மயிலத்தமடு பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரையினை பெற்றுக்கொடுக்கும் அறவழிப்போராட்டம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் 15.09.2025 அன்று ஆரம்பிக்கப்பட்டதுடன், ,730 வது நாளாக இன்றைய தினம் சித்தாண்டியில் நடைபெற்று வருகின்றது .
இதன் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் , கால்நடைகளை கொல்லாதே ! அரசே வேடிக்கை பார்க்காதே ! உரிமைக்காக குரல் கொடுப்போம் ! இரண்டு வருடங்கள் கடந்தும் பண்ணையாளர்கள் ஏமாற்றப்படுவது ஏன் , பண்ணையாளர்களுக்கு நிரந்தர மேய்ச்சல் தரையை வழங்கு என்ற பல்வேறு கோசங்களை எழுப்பியும் , பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான டாக்டர் இ. சிறிநாத், இ. சாணக்கியன் , பிரதேச சபை தவிசாளர்கள் , உறுப்பினர்கள் போன்றோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All