
janani
Mar 29, 2026
உலகம்
ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக தொடரும் போராட்டம் !

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகத்தின் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அமெரிக்காவின் பிரதான நகரங்கள் எங்கும் பாரிய மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளன.
மில்லியன் கணக்கான மக்கள் பங்கேற்ற ‘மன்னர்கள் வேண்டாம்’ (No Kings) போராட்டத்தின் மூன்றாம் கட்டமாக இந்தப் போராட்டங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
டொனால்ட் ட்ரம்ப் அமுல்படுத்தி வரும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளே இந்தப் போராட்டங்களுக்குக் காரணமாக அமைந்துள்ளன.
போராட்டத்தின் போது ஜனாதிபதி ட்ரம்ப், துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் மற்றும் நிர்வாகத்தின் முக்கிய அதிகாரிகளின் உருவப்பொம்மைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாகச் சென்றனர்.
அவர்களைப் பதவியில் இருந்து நீக்குமாறும், உடனடியாகக் கைது செய்யுமாறும் போராட்டக்காரர்கள் ஆவேசமாக முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
இந்தத் தொடர் போராட்டங்களால் அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், அரசியல் ரீதியான பெரும் பதற்றமும் நிலவி வருகின்றது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





