
puja
Aug 10, 2026
உலகம்
அமெரிக்கா நிபந்தனைகளை ஏற்கும்வரை ஹோர்முஸ் திறக்கப்படாது!

ஹோர்முஸ் நீரிணை ஊடாக புதிய கடற்போக்குவரத்து பாதைகளை தீர்மானிப்பதற்காக ஓமானுடன் இறுதி உடன்படிக்கைக்கு வரத் தயாராக இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.
எனினும், இந்த கடல் பாதையை மீண்டும் திறக்க வேண்டுமானால், இழப்பீடு வழங்குதல், தடைகளை நீக்குதல் மற்றும் இராஜதந்திர அச்சுறுத்தல்களை நிறுத்துதல் உள்ளிட்ட நிபந்தனைகளை அமெரிக்கா நிறைவேற்ற வேண்டும் என ஈரான் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
கடந்த பெப்ரவரி மாத இறுதியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக ஈரான் இந்த கடல் பாதையை மூடியது.
ஓமானுடன் எட்டப்படும் உடன்படிக்கை மூலம் புதிய கடற்பாதை தீர்மானிக்கப்படும் போதிலும், அமெரிக்கா தனது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை நீரிணை திறக்கப்பட மாட்டாது என ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராகச்சி தெரிவித்தார்.
ஜூன் மாதம் எட்டப்பட்ட இடைக்கால ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறியுள்ளதால் நேரடிப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட மாட்டாது என்றும், மத்தியஸ்தர்கள் மூலமாக மட்டுமே செய்திகள் பரிமாறப்படுவதாகவும் அவர் கூறினார்.
இருப்பினும், தான் ஈரானுடன் தீவிரமாக தலையிடாமல், அவர்களின் பொருளாதார அழுத்தத்தை கவனித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானின் நிபந்தனைகள்:
அமெரிக்கத் தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்குதல்.
ஈரானுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் மற்றும் ஈரான் ஆதரவுப் பிரிவினர் மீதான (லெபனான், பாலஸ்தீனம், ஏமன், ஈராக்) தாக்குதல்களை நிறுத்துதல்.
பாரசீக வளைகுடா பகுதியில் அமெரிக்க கடற்படை சோதனைகளை நிறுத்துதல், தடைகளை நீக்குதல் மற்றும் முடக்கப்பட்ட ஈரானிய சொத்துக்களை விடுவித்தல்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





