
admin
May 10, 2026
உள்ளூர்
இன்றைய காலநிலை

இலங்கையை அண்மித்த கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலைமையானது, நாளை (11) ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக வலுவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதன்தாக்கம் காரணமாக, நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்பதுடன், அநேகமான பகுதிகளில் வானம் மேகமூட்டமாகக் காணப்படும்.
மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அநுராதபுரம் மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும்.
இதனால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





