
sasi
Jan 2, 2026
உள்ளூர்
நிலத் தகராறில் குடும்பத்தினர் மீது கத்தி தாக்குதல்.

மாவனெல்லையில் நேற்று மூன்று பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் கத்திக்குத்து, நிலத் தகராறு காரணமாக நடந்ததாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
மாவனல்லை, கொண்டேனிய, தனாகம பகுதியில் நேற்று மாலை நபர் ஒருவர் தனது உறவினர்கள் நான்கு பேரை கத்தியால் தாக்கியதாக காவல்துறை தெரிவித்தனர்.
இந்த தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்தனர், காயமடைந்த பெண் ஒருவர் மாவனல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக 33 வயதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மாவனல்லை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






