Search

Dec 22, 2025

உள்ளூர்

தையிட்டி விகாரை அகற்றக் கோரி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

தையிட்டி விகாரைக்கு எதிராக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“தையிட்டி எங்கள் சொத்து – எங்கள் காணிகளை அபகரிக்காதே” என கோஷங்களை எழுப்பிய மாணவர்கள், விகாரையை அகற்ற வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.

மேலும், தையிட்டியில் நேற்றைய தினம் நடைபெற்ற போராட்டத்தின் போது போராட்டக்காரர்களிடம் பொலிஸார் காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொண்டதாகவும், அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ததற்கும் மாணவர்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்தனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All