
sasi
Dec 26, 2025
உலகம்
குஜராத் மாநிலத்தில் நிலநடுக்கம்

குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகவும், அதிகாலை சுமார் 4.30 மணியளவில் அதிர்வு உணரப்பட்டதாகவும் NCS கூறியுள்ளது. நிலநடுக்கத்தின் மையம் மற்றும் ஆழம் தொடர்பான மேலதிக தொழில்நுட்ப தகவல்கள் தற்போது சேகரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நில அதிர்வால் மக்கள் மத்தியில் சிறிதளவு அச்சம் ஏற்பட்டிருந்தாலும், இதுவரை உயிரிழப்புகள் அல்லது சொத்துச் சேதங்கள் குறித்து எந்த உத்தியோகபூர்வ தகவலும் வெளியாகவில்லை.
மேலும், குஜராத் மாநிலத்தின் கட்ச் பகுதி அதிக நிலநடுக்க அபாயம் உள்ள மண்டலமாக வகைப்படுத்தப்பட்டுள்ளதுடன், இப்பிரதேசத்தில் அவ்வப்போது சிறிய அளவிலான நில அதிர்வுகள் ஏற்படுவது வழக்கமான ஒன்றாகும். தற்போதைய நிலைமையை உள்ளூர் நிர்வாகம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






