Search

Rebecca

Feb 16, 2026

உள்ளூர்

சாதாரண தர மாணவர்களுக்கான சிறப்பு அறிவிப்பு

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நடைபெறவுள்ள காலப்பகுதியில் ஏற்படக்கூடிய எதிர்பாராத காலநிலை மாற்றங்களினால் மாணவர்களுக்கு ஏற்படும் தடைகளைத் தவிர்க்கும் நோக்கில், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பரீட்சைத் திணைக்களம் இணைந்து விசேட கூட்டுத் திட்டமொன்றை ஆரம்பித்துள்ளன.

வளிமண்டலவியல் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO), முப்படையினர் மற்றும் காவல்துறை ஆகியவற்றுடன் இணைந்து இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

பரீட்சை காலப்பகுதியில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைப்பதற்கான வழிகாட்டுதல்கள் ஏற்கனவே அந்தந்த துறைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

அனர்த்தங்களினால் மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றுவதில் சிக்கல் ஏற்பட்டால், அதனைத் தீர்க்க அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் விசேட அவசர செயல்பாட்டுப் பிரிவு நிறுவப்பட்டுள்ளது.

மாணவர்கள் அல்லது பெற்றோர்கள் ஏதேனும் சிக்கல்களை எதிர்கொண்டால் பின்வரும் எண்களைத் தொடர்பு கொள்ளலாம்:

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்: 117

பரீட்சைத் திணைக்களம்: 1911

தேசிய பரீட்சை அவசர செயல்பாட்டு பிரிவு: 0113 668 010

0113 668 013

0113 668 020

0113 668 100

பரீட்சை காலப்பகுதியில் காலநிலை பாதிப்புகளைத் தவிர்ப்பது தொடர்பான முழுமையான வழிகாட்டி ஆவணத்தை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் (www.dmc.gov.lk) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All