Search

Sep 4, 2025

உள்ளூர்

இலங்கைத் தமிழர்களுக்கு வாழ்வுரிமை உறுதி – இந்திய மத்திய அரசு உத்தரவு.

நாட்டின் போர் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையை விட்டு வெளியேறிய இலங்கைத் தமிழர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள், இந்தியாவில் தாங்கள் சுதந்திரமாக வாழ வழிவகை செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், 2015 ஜனவரி 9ற்கு முன் ஆவணமின்றி இந்தியாவில் அகதிகளாக பதிவு செய்த இலங்கைத் தமிழர்கள், இனி சட்டபூர்வமாக இந்தியாவில் தங்கலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்ட தண்டனை விதிகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் மீது இனி சட்டவிரோத குடியேற்ற குற்றச்சாட்டு அமையாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All