Search

Dec 23, 2025

உள்ளூர்

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜனாதிபதியை சந்தித்தார்.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இச்சந்திப்பைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், நேற்று (22) பிற்பகல் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விசேட விமானம் ஒன்றின் மூலம் இலங்கையை வந்தடைந்தார்.

இந்த விஜயம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட பிரதிநிதியாக எஸ். ஜெய்சங்கர் மேற்கொண்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All