Search

Rebecca

Dec 4, 2025

உள்ளூர்

ஊதியத்தை நன்கொடையாக வழங்கும் அதிகாரிகள்

ஊவா மாகாண சபையின் அரச அதிகாரிகள் தமது ஒருநாள் ஊதியத்தை குறித்த மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் மீள் கட்டுமானப் பணிகளுக்கென நன்கொடையாக வழங்க தீர்மானித்துள்ளனர்.

இதற்கு மாகாண சபையின் அனைத்து அரச அதிகாரிகளும் தமது விருப்பத்தை தெரிவித்துள்ளதாக மாகாண பிரதம செயலாளர் அனுஷா கோகுல தெரிவித்துள்ளார்.

இதற்கான சுற்றுநிரூபமும் வெளியிடப்பட்டுள்ளது. ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டம் திட்வா புயல் தாக்கத்தினால் பாரிய பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All