
janani
Apr 28, 2026
உள்ளூர்
பிக்குகளின் வெளிநாட்டு பயணங்களுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள் வேண்டும் – அரசுக்கு கோரிக்கை!

கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுள்ள போதைப்பொருளுடன் 22 பிக்குகள் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, பிக்குகளின் வெளிநாட்டுப் பயணங்களுக்கான கட்டுப்பாடுகளை மீண்டும் அமுல்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பிக்குகள் குழுவினர், மகா நாயக்க தேரர்களின் எவ்வித உத்தியோகபூர்வ அனுமதியுமின்றி தாய்லாந்திற்குச் சென்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதற்கு முன்னர் பிக்குகள் வெளிநாடு செல்வதற்கு மகா நாயக்க தேரர்களின் எழுத்து மூல அனுமதி கட்டாயமாக்கப்பட்டிருந்தது. எனினும், அந்த நடைமுறையை அரசாங்கம் அண்மையில் நீக்கியிருந்தது.
இந்தச் சட்டத் தளர்வே இவ்வாறான பாரிய முறைகேடுகள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு வழிவகுத்துள்ளதாக பௌத்த மதத் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





