
Rebecca
Feb 19, 2026
உள்ளூர்
ஜனாதிபதியை தகாத வார்த்தைகளால் திட்டியவர்களுக்கு விளக்கமறியல்

மத்தல அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் ஆசனப்பட்டி இன்றி பஸ் வண்டியை அதிவேக வீதிக்குள் செலுத்த முயற்சித்தமை மற்றும் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களை ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் விளக்கமறியலில் வைத்துள்ளது.
அவர்களை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆசனப்பட்டி அணியாத சம்பவத்தின் போது ஜனாதிபதியை அவதூறாகத் திட்டியவாறும், பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும் நடந்துகொண்ட காணொளியொன்று சமூக ஊடகங்களில் பரவியிருந்தது.
இது தொடர்பில் ஐவர் பேலியகொடை போக்குவரத்துப் பிரிவின் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு, கடான பொலிஸார் ஊடாக ஹம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவர்கள் அன்றைய தினம் அடையாள அணிவகுப்பிற்கும் உட்படுத்தப்படவுள்ளனர்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






