Rebecca
Dec 4, 2025
உள்ளூர்
பகிடிவதை குற்றச்சாட்டு தொடர்பில் 19 மாணவர்களின் விளக்கமறியல் காலம் நீடிப்பு
பகிடிவதை புரிந்த குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்கள் 19 பேரின் விளக்கமறியலை எதிர்வரும் 10ஆம் திகதி வரை மன்று நீடித்துள்ளது.
பல்கலைக்கழகத்திற்குள் வெளியே உள்ள வீடொன்றுக்கு கனிஷ்ட மாணவர்களை அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தி பகிடிவதையில் ஈடுபட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டில் பெரும்பான்மை இன சிரேஷ்ட மாணவர்கள் 19 பேர் கடந்த மாதம் 29ஆம் திகதி கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி, நேற்றைய தினம் மாணவர்கள் யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.
இதன்போது 19 பேரையும் எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All








