Search

Rebecca

Jan 10, 2026

உள்ளூர்

புலதிசி ரயில் சேவை மீளவும் வழமைக்கு!

அசாதாரண சூழ்நிலை காரணமாக கடந்த ஏழு வாரங்களுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புலதிசி கடுகதி ரயில் சேவை நேற்றிலிருந்து (09) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வாரஇறுதியில் பொதுமக்களின் நலன் கருதி ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த சேவையானது நேற்று (09) நண்பகல் கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கான கடுகதி சேவையை முன்னெடுத்திருந்தது.

மட்டக்களப்பில் இருந்து மீண்டும் ஞாயிற்றுக்கிழமை (11) நண்பகல் கொழும்புக்கான கடுகதி சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

கிழக்கு மாகாண சுற்றுலாத்துறையை கட்டி எழுப்பும் நோக்குடன் டிட்வா புயலினால் பாதிக்கப்பட்டிருந்த ரயில் சேவை கட்டம் கட்டமாக அபிவிருத்தி பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

எதிர்காலத்தில் பொதுமக்கள், மாணவர்களின் நலன் கருதி இந்த சேவையானது மேலும் விஸ்தரிக்கப்பட உள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All