
janani
Jul 8, 2026
உள்ளூர்
நுவரெலியாவில் தலகல ஓயாவிற்குள் கவிழ்ந்த தனியார் பேருந்து!

நுவரெலியா நகரில் இன்று (08) இடம்பெற்ற துரதிர்ஷ்டவசமான விபத்தில், கிரெகரி ஏரியை ஒட்டியுள்ள தலகல ஓயாவிற்குள் தனியார் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
நுவரெலியாவிலிருந்து சாந்திபுர நோக்கிப் பயணித்த குறித்த பேருந்து, தற்காலிகமாக நிறுத்த முற்பட்ட வேளையில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த தலகல ஓயாவிற்குள் பாய்ந்து கவிழ்ந்துள்ளது. விபத்து இடம்பெற்ற தருணத்தில் பேருந்திற்குள் பயணிகளோ அல்லது பொதுமக்களோ இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பேருந்தின் சாரதி மற்றும் நடத்துநர் மட்டுமே இருந்துள்ளதுடன், அவர்கள் இருவரும் காயங்களின்றி உயிர் தப்பியுள்ளதாக நுவரெலியா பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






