
janani
Apr 5, 2026
உள்ளூர்
கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு !

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் மற்றும் எரிசக்தி விலையேற்றம் காரணமாக இலங்கையில் கட்டிட நிர்மாணப் பொருட்களின் விலைகள் இரட்டை இலக்க சதவீதத்தில் அதிகரித்துள்ளன. சந்தையில் நிலவும் இந்தத் திடீர் விலையேற்றம் மற்றும் செயற்கைத் தட்டுப்பாடு காரணமாகச் சாதாரண மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
ஒரு மூடை சிமெந்தின் விலை 2,100 ரூபாவைக் கடந்துள்ளதுடன், சந்தையில் அதன் தெரிவுகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு கியூப் ஆற்று மணலின் விலை மார்ச் மாத தொடக்கத்துடன் ஒப்பிடுகையில் 20 வீதம் அதிகரித்துள்ளது.
வளைகுடா நாடுகளில் உள்ள உலகின் மிகப்பெரிய அலுமினிய உற்பத்தி நிலையங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதாக வெளியான செய்திகளையடுத்து, அலுமினியத்தின் விலை மேலும் உயரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






