Search

admin

Jun 28, 2026

உலகம்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி அபாயம் இல்லை என அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் உள்ள இவதே மாகாணத்தின் கடற்கரைப் பகுதியில் இன்று (28) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. 

 

இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆகப் பதிவாகியுள்ளது. 

 

இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படும் அபாயம் எதுவும் இல்லை என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம் (JMA) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 

கடலுக்கு அடியில் 41 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அந்த மையம் மேலும் தெரிவித்துள்ளது.

 

நிலநடுக்கத்தின் அதிர்வுகள் ஹச்சினோஹே நகரம் மற்றும் புடாய் கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக உணரப்பட்டன.

 

ஜப்பானின் நில அதிர்வு அளவுகோலில் இது 'நெகட்டிவ் 5' ஆகப் பதிவாகியுள்ளது. டோக்கியோ உள்ளிட்ட சுற்றியுள்ள பல பகுதிகளிலும் லேசான அதிர்வுகள் அறியப்பட்டன.

 
கடந்த ஜூன் 25 அன்று இதே இவதே கடற்கரைப் பகுதியில் ரிக்டர் அளவில் 6+ என்ற மிகத் தீவிரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே தற்போதைய நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மலைப்பாங்கான இடங்களில் பாறைச் சரிவுகள் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் தொடர்ந்து விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.


இதுகுறித்து ஜப்பானியப் பிரதமர் சனாயே தகைச்சி (Sanae Takaichi) தனது சமூக ஊடகப் பக்கத்தில், சுனாமி ஆபத்து எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், ஜூன் 25 நிலநடுக்கத்தின் போதே பிரதமரின் அலுவலகத்தில் அமைக்கப்பட்ட அவசரக்கால மேலாண்மைப் பிரிவு நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், சேத விவரங்களை விரைவாகக் கண்டறிந்து மக்களுக்குத் துல்லியமான தகவல்களையும் உதவிகளையும் வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All