
admin
May 30, 2026
உள்ளூர்
எம்.பி அர்ச்சுனாவுக்கு எதிரான வழக்கு ஜூன் 19 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் உள்ளிட்டோருக்கு எதிராக நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ், தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, எதிர்வரும் ஜூன் மாதம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை புற்றுநோய் மருத்துவமனையின் மருத்துவரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு நேற்றையதினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதற்கமைய, எதிர்வரும் ஜூன் மாதம் 19 ஆம் திகதி குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள, யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தெல்லிப்பழை மருத்துவமனையின் புற்று நோய்ப்பிரிவு மருத்துவர் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியக் குற்றச்சாட்டில், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா உள்ளிட்ட மருத்துவர்கள் இருவருக்கு எதிராக நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





