Search

janani

May 2, 2026

உள்ளூர்

சீரமைப்பு முடிந்தும் வடக்கு ரயில் சேவை இன்னும் நிறுத்தம் - வடக்கு ரயில் பயணிகள் அவதி!

டித்வா புயலினால் சேதமடைந்த மன்னார் மற்றும் வடக்கு ரயில் பாதைகளின் திருத்தப்பணிகள் நிறைவடைந்துள்ள போதிலும், 'யாழ் தேவி' உள்ளிட்ட பல ரயில்கள் இன்னும் சேவையில் ஈடுபடுத்தப்படவில்லை என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

'உத்தர தேவி' கடுகதி ரயில்கூட இதுவரை சேவையில் இணைக்கப்படவில்லை என அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. 

ஏனைய பாதைகளிலும் ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பிரதான ரயில்கள் இவ்வாறு இயக்கப்படாததால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இது குறித்து கருத்துத் தெரிவித்த அந்தச் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன, இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு போக்குவரத்து அமைச்சிடம் எந்தவொரு திட்டமும் இல்லை எனக் குறிப்பிட்டார். 

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All