Search

admin

May 24, 2026

உள்ளூர்

எதிர்கால இலங்கைக்கான புதிய சிந்தனைகள் மெல்போர்னில்

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வசிக்கும் இலங்கை சமூகத்தினருடன் நடத்தப்பட்ட 'கெக்கும  Sri Lanka - Mingle with Dilith' என்ற சிறப்பு சந்திப்பு, மெல்போர்னில் உள்ள அகேசியா கெம்பஸ் தியேட்டரில் நடைபெற்றது.


'சர்வஜன அதிகாரம்' மற்றும் Melbourne Solidarity ஆகிய அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இச்சந்திப்பில், மெல்போர்னில் வசிக்கும் பெருமளவிலான இலங்கையர்கள் கலந்துகொண்டனர்.


இதன்போது, இச்சந்திப்பில் கலந்துகொண்ட திலித் ஜயவீரவுக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.


தாய்நாட்டிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் வாழ்ந்தாலும், நாட்டின் மீது தீராத பற்றுக்கொண்ட மெல்போர்ன் வாழ் இலங்கையர்களுடன் - நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமை, எதிர்கால சவால்கள் மற்றும் ஒரு தொழில்முனைவோர் ராஜ்யத்தை கட்டியெழுப்புவதற்கான வாய்ப்புகள் குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.


அத்துடன், வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு தாய்நாட்டின் மீதுள்ள அக்கறை, அன்பு மற்றும் எதிர்கால இலங்கையின் வளர்ச்சிக்காக பங்களிக்க அவர்கள் கொண்டுள்ள தயார்நிலை ஆகியன இச்சந்திப்பில் வெளிப்பட்டதுடன், அவர்களின் ஆதரவு எதிர்காலத்திலும் தாய்நாட்டிற்கு பெரும் பலமாக அமையும் என்றும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

 

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All