
admin
Dec 30, 2025
உள்ளூர்
காணாமல்போன முதியவர் சடலமாக மீட்பு

பதுளை, மடுல்சீமை, மஹதொவ தோட்டப் பகுதியில் உள்ள கால்வாயில் திங்கட்கிழமை மாலை அழுகிய நிலையில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மடுல்சீமை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மடுல்சீமை, மஹதொவ தோட்டப் பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய முதியவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.முதியவர் கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தோட்டப் பகுதியில் இருந்த பிரதேசவாசிகள் சிலர், சடலத்தை கண்டு உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
முதியவர் இறுதியாக அணிந்திருந்த ஆடையை பயன்படுத்தி அவரது மகன் சடலத்தை அடையாளம் கண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மடுல்சீமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






