
janani
Mar 17, 2026
உள்ளூர்
கல்வி அமைச்சின் அதிரடி அறிவிப்பு !

உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், பாடசாலைகளின் அன்றாட நிர்வாகம் மற்றும் கற்றல் - கற்பித்தல் செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்வது தொடர்பாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு புதிய வழிகாட்டுதல்கள்களை வெளியிட்டுள்ளது.
அரசு மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தனியார் பாடசாலைகளுக்கும் இந்த அறிவித்தல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, முக்கியமாக அவதானம் செலுத்தப்பட்டுள்ள விடயங்கள் பின்வருமாறு:
அனைத்து பாடசாலைகளும் வாரத்திற்கு நான்கு நாட்கள் மாத்திரமே நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், மறு அறிவித்தல் வரை அனைத்து புதன்கிழமைகளும் பாடசாலை விடுமுறை தினங்களாகக் கருதப்படும். ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் மாணவர்கள் வீட்டிலிருந்தே சுயகற்றலில் ஈடுபடுவதற்குத் தேவையான கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகளை வழங்க அதிபர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





