Search

Rebecca

Feb 21, 2026

உள்ளூர்

பிரதமரின் தலைமையில் மாத்தறை கலை விழா கோலாகலமாக ஆரம்பம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கலைஞர்களின் பல்வேறு கலைப்படைப்புகளை உள்ளடக்கிய 'மாத்தறை கலை விழா' (Matara Festival for the Arts), பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நேற்று முன்தினம் (பெப்ரவரி 19) மாத்தறைக் கோட்டை பழைய மேல் நீதிமன்ற வளாகத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மாத்தறை பழைய மேல் நீதிமன்ற வளாகம் மற்றும் மாத்தறை மாவட்ட செயலகக் கேட்போர் கூடம் என்பவற்றை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ள இக்கலை விழா, பெப்ரவரி 20 முதல் 23ஆம் திகதி வரை பொதுமக்களுக்காகத் திறந்திருக்கும்.

இவ்விழாவில் காட்சிக் கலைக் கண்காட்சிகள், குறும்படத் திரையிடல்கள், கலைச் சந்தை மற்றும் துறைசார் நிபுணர்களால் வழிநடத்தப்படும் செயன்முறைப் பட்டறைகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

இந்த ஆரம்ப விழாவில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் உள்ளிட்ட கலைஞர்கள், விசேட விருந்தினர்கள் மற்றும் பெருமளவிலான பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All