
janani
Mar 20, 2026
உள்ளூர்
நிறைவு பெற்றது மனுஷ நாணயக்கார விசாரணை

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிவித்துள்ளது.
இந்த முறைப்பாடு இன்று கொழும்பு பிரதம நீதவான் அஸங்க எஸ். போதரகம முன்னிலையில் அழைக்கப்பட்டது.
இதன்போது, இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும், மேலதிக நடவடிக்கைகளுக்காக விசாரணைப் கோப்புகள் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் ஆணையாளர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்தனர்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





