Rizi
Sep 28, 2025
உள்ளூர்
மஹிந்தவை சந்திக்க தங்காலைக்கு சென்ற ரணில்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இன்று சந்தித்தார்.
முன்னாள் அமைச்சர்களான சாகல ரத்நாயக்க மற்றும் ரமேஷ் பத்திரண ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு முன்னாள் ஜனாதிபதிகளும் நீண்ட நேரம் சுமுகமான உரையாடலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், காலி, ஹினிதும மற்றும் அம்பாறை ஆகிய பகுதிகளிலிருந்து இன்றும் ஆதரவாளர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க பேருந்துகளில் தங்காலைக்கு சென்றிருந்தனர்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All