
admin
Apr 15, 2026
உள்ளூர்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நீண்ட வாகன வரிசை!

தெற்கு அதிவேக வீதியின் காலி, பின்னதுவ நுழைவாயிலில் இன்று (15) நீண்ட வாகன வரிசைகளைக் காணமுடிந்ததாக 'அத தெரண' செய்தியாளர் தெரிவித்தார்.
அதிவேக வீதியிலிருந்து வெளியேறுவதற்கும் உள்ளே பிரவேசிப்பதற்கும் அவ்வப்போது மிக நீண்ட வாகன வரிசைகள் காணப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டுத் தமது சொந்த இடங்களுக்குச் சென்ற பயணிகளின் வசதிக்காக, இன்று (15) முதல் மேலதிக பேருந்துகளைச் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது குறித்து அனைத்து மாகாண போக்குவரத்து அதிகாரசபைகளுக்கும் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் ஷெரின் அத்துகோரள குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இன்று (15) ஒரு சாதாரண அலுவலக நாள் என்பதால், அலுவலக ரயில்களை வழக்கம் போல் இயக்குவதற்கு ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது. பயணிகளின் தேவையைக் கருத்திற்கொண்டு அந்தந்த ரயில்கள் சேவையில் இணைக்கப்படும் என ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் அசங்க சமரசிங்க தெரிவித்துள்ளார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






