Search

Oct 3, 2025

உள்ளூர்

மூதூரில் நாளை நீர் வெட்டு!

நீர் பாசன வடிகாலமைப்பு சபை  சில பகுதிகளில் அவசர திருத்த வேலை மேற்கொள்ளவிருப்பதால் நாளை சனிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மூதூர் மற்றும் அதைச் சூழ்ந்துள்ள பல பகுதிகளில் குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த காலப்பகுதியில் மக்கள் தேவையான அளவு தண்ணீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்ளுமாறு நீர் பாசன வடிகாலமைப்பு சபை கேட்டுக்கொண்டுள்ளது.


மேலும், திருத்தப் பணிகள் முடிவடைந்தவுடன் உடனடியாக நீர் விநியோகம் வழமைக்கு திரும்பும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All