Rizi
Oct 10, 2025
உள்ளூர்
பாடசாலையில் வழங்கப்பட்ட உணவு ; 60 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
பாதுக்கை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் பாடசாலை உணவாயு உற்கொண்டு திடீரென சுகயீனமுற்று 60 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாதுக்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்
இன்று காலை பாடசாலையில் வழங்கப்பட்ட காலை உணவை உட்கொண்ட 60 மாணவர்கள் திடீரென சுகயீனமுற்றதை தொடர்ந்து சுகயீனமுற்ற மாணவர்கள் அனைவரும் பாதுக்கை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் 40 பேர் சிகிச்சை பெற்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பியுள்ள நிலையில் ஏனையவர்கள் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், மூவர் மேலதிக சிகிச்சைக்காக ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பாடசாலையில் வழங்கப்பட்ட காலை உணவை உட்கொண்டதால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக மாணவர்கள் இவ்வாறு சுகயீனமுற்றுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் பாதுக்கை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All