Search

Oct 20, 2025

உள்ளூர்

வவுணதீவில் காட்டு யானை தாக்குதல் பெண் ஒருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்சேனை, வாதகல்மடு கிராமத்தில் வசித்து வந்த நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர், காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.


இச்சம்பவம் இன்று அதிகாலை நேரத்தில் இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்தனர்.
அப்பெண் உறங்கிக் கொண்டிருந்தபோது வீட்டுக்குள் நெல்லை உண்பதற்காக நுழைந்த காட்டு யானையை கண்டு பயந்த அவர் வெளியே ஓடிச் சென்றபோது யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.


மரணமடைந்தவர் 58 வயதுடைய வைரமுத்து மலர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பாக வவுணதீவு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


இதேவேளை, மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தினால் யானை தாக்குதலுக்காக பத்து இலட்சம் ரூபா நிதியுதவி வழங்கப்படும் எனவும், முதற்கட்டமாக ஒரு இலட்சம் ரூபா இறந்தவரின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All