Search

admin

Apr 12, 2026

உள்ளூர்

புத்தலவில் பாரிய ஹெரோயின் பறிமுதல் – ஒருவர் கைது

புத்தல பகுதியில் அண்மைக் காலத்தில் மீட்கப்பட்ட மிகப்பெரிய ஹெரோயின் போதைப்பொருள் தொகையுடன் சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

 

மொனராகலை கோட்ட விஷப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போதே இவர் பிடிபட்டுள்ளார்.

 

சந்தேகநபரிடமிருந்து 84 கிராம் 50 மில்லிகிராம் ஹெரோயின், இரண்டு கைத்தொலைபேசிகள் மற்றும் போதைப்பொருள் விற்பனைக்காகப் பயன்படுத்தப்படும் தராசு என்பன மீட்கப்பட்டுள்ளன. 

 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் புத்தல பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சந்தேகநபர் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மொனராகலை கோட்ட விஷப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All