
janani
May 14, 2026
உள்ளூர்
16 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

நாட்டில் தொடரும் சீரற்ற வானிலையால், 5 மாவட்டங்களுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கையும், 11 மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பதுளையில் பசறைக்கும், காலியில் நெலுவ பிரதேசத்துக்கும், களுத்துறையில் அகலவத்தை, பதுரலிய, மதுகம, ஹொரணை மற்றும் வளல்லாவிட்ட ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டத்தில், பஸ்பாகே கோரளை, யட்டிநுவர, உடபளாத்த, பாத்தஹேவஹேட, பன்வில, கங்க இஹலகோரல, கங்கவட்டகோரல மற்றும் அக்குரண ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இரத்தினபுரியில் பெல்மதுல்ல மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





