
Rebecca
Mar 5, 2026
உள்ளூர்
கமேனியின் மறைவு: ரணில் ஈரான் தூதரகத்திற்கு விஜயம்

ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (05) காலை ஈரான் தூதரகத்திற்குச் சென்றிருந்தார்.
ஈரான் தலைவரின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிப்பதற்காகக் கொழும்பில் உள்ள ஈரான் தூதரகத்தில் தற்போது விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, அங்கு சென்ற முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அங்கு வைக்கப்பட்டுள்ள புத்தகத்தில் தனது அனுதாபச் செய்தியைப் பதிவு செய்துள்ளார்.
அதன்பின்னர், தூதரக அதிகாரிகளைச் சந்தித்த அவர், தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொண்டார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





