Search

Rebecca

Feb 28, 2026

உள்ளூர்

கச்சதீவு திருவிழா ஆரம்பம்

கச்ச தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை தேவாலயத்தின் எதிரே உள்ள கொடிமரத்தில் அந்தோணியார் திருவுருவம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டு திருவிழா ஆரம்பமானது.

இந்த கொடியேற்ற நிகழ்வில் நெடுந்தீவு பங்குதந்தை பத்தி நாதன் கலந்துகொண்டு திருவிழா கொடியினை ஏற்றி வைத்து திருவிழாவை தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து தேவாலயத்தில் யாழ் மறை மாவட்ட ஆயர் ஜெபரத்தினம் தலைமையில் பங்குத்தந்தைகள் பிராத்தனையில் ஈடுபட்டனர்.

இம்முறை இலங்கையை சேர்ந்த 6ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் கச்ச தீவுக்கு சென்றுள்ளதாகவும் , இந்தியாவில் இருந்து 3992 பக்தர்கள் வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All