Rebecca
Dec 11, 2025
உள்ளூர்
யாழில். வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆசிரியை உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆசிரியை உயிரிழந்துள்ளார்.
வடமராட்சி பகுதியை சேர்ந்த நிஷாந்தினி நித்திலவர்ணன் (வயது 43) என்பவரே உயிரிழந்துள்ளார்.
வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்தார் என பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக, யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All








